அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்

Posted by biskothupayal

ஒரே வேண்டுகோள் தயவுசெய்து யாரும் ஈழத்தை பற்றி பேசாதீர் அந்த தகுதியை அனனவரும் இழந்து விட்டிர்கள்

அனைவரும் அதை வைத்து வெட்கமில்லாமல் அரசியல் செய்ய கற்று கொண்டிர்கள். ஈழத்தில் மனிதமிருகம் ஒன்று ரசாயன குண்டுகளினால் மனித உயிர்களை தின்று கொண்டிருக்க அந்த பிணங்களின் மேலே இங்கு ஒவ்வொருவரும் தங்கள் கட்சி கொடியினை நட்டு அவர்களின் ரத்தத்தில் கட்சி க்கொடிகளுக்கு சாயம் பூசி அந்த வாசனை நுகர்கிறிர்கள் தமிழன் எங்கு புதைத்தாலும் முளைத்து வருவான் என்று வீர வசனம் பேசுகிறிர்கள் ஆனால் அங்கு புதைக்கவும் முடியாமல் எரிக்கவும் வழியல்லாமல் உடல்களை மட்டுமல்லாமல் உயிர்களையும் துண்டு துண்டாக குண்டுகளால் சிதற அடிக்கின்றனர்.

செத்தவனைவிட பிஞ்சு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உயிரோடு இருப்பதையே தண்டனையாக அனுபவித்து கொண்டிருப்பதோ இன்னும் சோகம் .

நிலவை காட்டி சோறு ஊட்டும் மரபை கொண்டுள்ளவர்கள் அங்கு இன்று
நிலத்தேயே பார்க்க முடியாமல் பதுங்கு குழியிலேஎ பட்டினியால் செத்து மடிகின்றனர்.
பால்வடியும் முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டுஇருக்கறது.

இதற்கு மேல் என்ன பேசுவது தெரியவில்லை ?

வள்ளுவன் சொல்லோடு நிறைவு செய்கிறேன்.

"சொல்லு சொல்லில் பயன்உடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலா சொல் "

பொருள் : பேசுவதாயிருந்தால் பயன் தரக்கூடிய சொற்களையே பேச வேண்டும். அப்படி பயன் இல்லாததை பேசுவதை விட பேசாமல் இருத்தல் நலம்.

என் மனதில் உள்ளவைகளை எழுத்தாக கொடுத்து இருக்கிறேன். /javascript'/>

Views

2 comments:

  1. இராகவன் நைஜிரியா said...

    இவர்கள் எல்லாம் எதில் அரசியல் செய்யலாம் என்று சமயம் பார்த்து இருக்கும் சந்தர்ப்பவா(வியா)திகள். என்ன சொன்னாலும் உரைக்காது. சுரணை கெட்ட ஜென்மங்கள். பிணத்தை வைத்து காசு பார்ப்பவார்கள்.

  2. Anonymous said...

    மனசாட்சி என்னை கொல்கிறது தோழா....என்ன பதில் சொல்வேன் அதற்கு...காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் எட்டப்பர்களே தலைவர்களாக இருக்கும் இவ்வினத்தில் பிறந்து விட்டேனே...

Post a Comment